நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நல்லறங்கள்

ஆய்வுகள் | by - இமாமுத்தீன் ஹஸனி On Dec 09, 2023 Viewers: 326


நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நல்லறங்கள்

நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நல்லறங்கள்

- இமாமுத்தீன் ஹஸனி


இறப்பு இயற்கையானது:
இன்று, சில முஸ்லிம்கள் மற்ற மதங்களில் இருப்பது போன்று தங்கள் உறவுகளில் இறந்தவர்களுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள், நினைவு அஞ்சலி போஸ்டர்கள் போன்றவற்றை தெருக்களில், சாலைகளின் சுவர்களில் போன்ற இடங்களில் ஒட்டுவதையும், பேனர்கள் வைப்பதையும் பார்க்க முடிகிறது.



அதுபோன்று, என்றோ இறந்து போனவர்களுக்கு இன்று நினைவு நாள் கொண்டாடுகிறார்கள். அதை துக்க நாளாக அனுசரிக்கிறார்கள். ஐந்தாம் ஆண்டு, பத்தாம் ஆண்டு என நூறாம் ஆண்டு என்று கூட பல அரசியல் தலைவர்களின் இறந்த நாளை இன்றும் நினைவு நாள் என்ற பெயரில் அவருக்கு சிலை வைத்து, அதற்கு மாலை அனுவித்து, மரியாதை செலுத்தி வருகிறார்கள்.



இதுபோன்ற சடங்குகளை நாம் இஸ்லாமிய கண்ணோட்டத்தோடு உரசிப் பார்க்க வேண்டும். அல்லாஹ்வையும், மறுமையையும் நம்பிக்கை கொண்ட, மார்க்கத்தை படித்த ஒரு முஸ்லிம் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டார்.



உயிரோடு இருப்பவர்கள் பிறந்த நாள் கொண்டாடுவதையே மார்க்கம் கூடாது என்று தடுத்திருக்கும்போது, எப்பொழுதோ இறந்தவர்களுக்காக இறந்த நாள் கொண்டாடப்படுவதைப் பற்றி என்ன சொல்வது? 



இஸ்லாமில் எந்த ஒரு மனிதருக்காகவும், தலைவனுக்காகவும் ஏன் எந்த ஒரு இறைத் தூதருக்கும் கூட இதுவரை பிறந்த நாள், இறந்த நாள், நினைவு நாள் என்று எந்த ஒரு நாளும் கொண்டாடப்பட்டதில்லை. அப்படி சிலர் செய்கிறார்கள் என்றால் அது மார்க்க அடிப்படையில் தவறானதாகும். 



முன் சென்ற நபிமார்களின் வரலாறுகளை அல்லாஹ் நமக்கு குர்ஆனில் கூறி இருக்கிறான். அதுபோன்று அநியாயம் செய்த மக்கள் அழிக்கப்பட்ட வரலாறையும் சேர்த்து கூறி இருக்கிறான். காரணம், நாம் அதன் மூலம் படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக. 



அல்லாஹ் கூறுகிறான் :

நிறைவான அறிவுடையவர்களுக்கு இவர்களுடைய சரித்திரங்களில் ஒரு படிப்பினை திட்டவட்டமாக இருக்கிறது. (அல்குர்ஆன் 12:111)



அதுபோன்று, நபி (ஸல்) அவர்களும் முன் வாழ்ந்த மக்களின் சம்பவங்களை, அவர்கள் கொல்லப்பட்டதற்கான காரணங்களை நமக்கு விவரித்துள்ளார்கள். அதைக் கொண்டு நாம் படிப்பினை பெற வேண்டும் என்பதற்காகத்தான் அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் நமக்கு விவரித்துள்ளார்களே தவிர, அவர்களின் இறந்த நாளை கொண்டாடுவதற்காக அல்லது துக்க நாளாக அனுஷ்டிப்பதற்காக அல்ல.



ஏனெனில், மனிதனுக்கு ஏற்படுகிற பிறப்பும் இறப்பும் இயற்கையானதாகும். பிறந்தால் இறப்பு என்பது கண்டிப்பாக இருக்கும். மனிதனைத் தவிர உள்ள மற்ற எந்த ஒரு உயிரினமும் இதை கண்டு கொள்வது கிடையாது. பெரிது படுத்துவது கிடையாது. 



ஏனெனில், பிறப்பும் இறப்பும் ஒவ்வொரு நாளிலும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஒருவர் உலகத்தை விட்டுப் பிரியும் போது இன்னொருவர் அதில் நுழைகிறார். ஒருவருக்கு இரங்கல் செய்தி சொல்லப்படும் போது இன்னொருவருக்கு சுபச்செய்தி சொல்லப்படுகிறது. ஒருவர் மண்ணறைக்கு கொண்டு செல்லப்படும்போது இன்னொருவர் மாளிகைக்கு கொண்டு வரப்படுகிறார். ஒருவருக்கு பெயர் சூட்டப்படுகிறது; இன்னொருவருக்கு பெயர் மாற்றப்படுகிறது (ஜனாசா).



இருவருக்கும் உள்ள வித்தியாசம், ஒருவர் பிறக்கும் போது சிரிக்கிறோம்; இன்னொருவர் இறக்கும் போது அழுகிறோம். அதுவும் மூன்று நாள்கள் சென்று விட்டால் மரணித்தவரையும் மரணத்தையும் மறந்து விடுகிறோம். இதுதான் எதார்த்தம். 



இன்று, நம்மில் எத்தனையோ பேர் இளம் வயதில் விபத்தால், நெஞ்சு வழியால் திடீர் மரணம் அடைகிறார்கள். அந்த நிகழ்வை நாம் யோசித்தும் பார்த்திருக்க மாட்டோம். அவரின் இழப்பானது அவரது குடும்பத்தையும் அந்த ஊர் மக்களையும் மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தி இருக்கும்.



ஆனால், பரிதாபம்! சில நாட்கள் சென்று விட்டால் மரணித்தவரையும் மறந்து விடுகிறோம்; மரண நிகழ்வையும் மறந்து விட்டு மனம் போன போக்கில் வாழ்க்கையை வாழத் தொடங்குகிறோம். 



இப்படி இருக்கையில் அவர் இறந்த தினத்தை மட்டும் நினைவில் வைத்து அதில் சில சடங்குகளை, அனுஷ்டானங்களை மட்டும் செய்து விட்டால் அவரை நினைவு கூர்ந்தவர்களாக ஆகிவிடுவோமா? அல்லது நாம் செய்யக் கூடிய இந்த செயல்கள் அவரின் மண்ணறை வாழ்க்கைக்கு ஏதும் பலனளிக்குமா? என்பதை நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை.



எதனால் அவர் மரணித்தார்? எப்படி மரணித்தார்? மரணத்திற்கான காரணம் என்ன? எந்த இடத்தில், எந்த நேரத்தில், எப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் மரணித்தார்? அவருக்கு ஏற்பட்டது போன்ற மரணம் எனக்கு ஏற்படாதா? அல்லது மரணமே எனக்கு நிகழாதா? அல்லது இந்த வயதில் தான் நான் மரணிப்பேன் என்று ஏதும் இறைவனிடத்தில் ஒப்பந்தம் செய்துள்ளோமா?



இதுபோன்ற கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். இதுதான் அவரை நாம் உண்மையாக நினைவு கூறுகிறோம் என்பதற்கான அடையாளம். 



அவர், ஒருவேளை கெட்டவராக வாழ்ந்து இறந்திருந்தால் அதுபோன்ற வாழ்க்கையை நாம் வாழ்வதை விட்டும் தவிர்ந்திருக்க வேண்டும். அவர் நல்லவராக இருந்தால் அதுபோன்ற வாழ்க்கையை நாமும் வாழ முயற்சி செய்ய வேண்டும்; அவரை ஒரு முன்னுதாரணமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். 



அதுபோன்று, அவர்களின் மரணத்தையும் மரண நிகழ்வுகளையும் படிப்பினையாக வைத்து ஒவ்வொரு நாளும் அதன் மூலம் நல்லுணர்வு பெற வேண்டும். நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். காலையில் எழும்போதும் இரவில் கண் மூடும் போதும் இதை சிந்தித்துப் பார்த்தால் கண்டிப்பாக நம் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை பார்க்கலாம்.



அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) கூறுகிறார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு 'உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு' என்றார்கள். 

(அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) 

'நீ மாலை நேரத்தை அடைந்தால் காலை வேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க்குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு' என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள். நூல் : புகாரி-6416.



இறப்பு ஓர் பேரிழப்பு:


உண்மையில் மரணம் என்பது தாங்க முடியாத பேரிழப்பாகும். எதைக்கொண்டும் அதை ஈடுகட்ட முடியாது. இறப்புச் செய்தி என்பது அவரை சார்ந்தவர்களுக்கு கண்டிப்பாக மிகுந்த மனவேதனையை கொடுக்கும். அது அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாத துக்கமாகத்தான் இருக்கும். 



இருப்பினும் நாம் அல்லாஹ்வையும், மறுமையையும் நம்பிக்கை கொண்டவர்கள். விதியை நம்பியவர்கள். மரணம் எப்போதும் யாருக்கும் வரும் என்பதை நம்பியவர்கள். உலகம் தற்காலிகமானது, மறுமைதான் நிரந்தரமானது என்பதை நம்பியவர்கள். நாம் மறுமைக்காக படைக்கப்பட்டவர்கள் என்ற நம்பிக்கையில் உலகில் வாழக்கூடியவர்கள். நம்முடைய உடலும் உயிரும் அல்லாஹ்விற்கு சொந்தமானது என்பதை நம்பியவர்கள்.



எனவே, நம்மில் ஒருவர் இறந்தால் அவருக்காக அழுகிறோம். அனுதாபம் தெரிவிக்கிறோம். அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறுகிறோம். அவருடைய இறுதி கடமைகளை நிறைவேற்றுகிறோம். அவரை குளிப்பாட்டுவது, கஃபன் செய்வது, அவருக்காக தொழுகை நடத்தி துஆ செய்வது, அவரை நல்லடக்கம் செய்வது போன்ற நன்மையான காரியங்களில் ஈடுபடுகிறோம். 



இதுதான் மார்க்கம் நமக்கு கற்றுக் கொடுத்த அழகிய, அமைதியான, பண்பான வழிகாட்டுதல்கள் ஆகும்.



இதை விட்டுவிட்டு அவருக்காக ஒப்பாரி வைப்பது, நெஞ்சில் அடித்துக்கொள்வது, அவருக்கு மாலை போடுவது, அவர் இறந்த தினத்தில் அவருக்காக ஃபாத்திஹா ஓதுவது, நினைவு அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டுவது, நினைவு நாள் என்ற பெயரில் சடங்குகள் செய்வது போன்ற மார்க்கத்திற்கு முரணான, வீண்விரயமான, பலனில்லாத செயல்களை நாம் செய்யக் கூடாது.



இப்படி செய்வதால் இறந்தவருக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவது கிடையாது. இதுபோன்ற சடங்கான செயல்களை தவிர்த்து விட்டு அவருக்கு எது நன்மை தருமோ அந்த காரியங்களில் நாம் ஈடுபட வேண்டும்.



உதாரணமாக, அவருக்காக தர்மங்கள் செய்வது, அவர் சார்பாக ஹஜ் இன்னும் உம்ரா செய்வது, அவர் நிறைவேற்றாமல் விட்டுவிட்ட நோன்புகளை அவர் சார்பாக நிறைவேற்றுவது, அவருடைய கடனை அடைப்பது, அவருடைய பாவமன்னிப்பிற்காக துஆ செய்வது, குறிப்பாக அவருடைய நல்ல பிள்ளைகள் அவருக்காக துஆ செய்வது.



அவருடைய பாவமன்னிப்பிற்காகவும், கப்ர் -மண்ணறை வாழ்க்கைக்காகவும், மறுமை வாழ்க்கைக்காகவும், கேள்வி கணக்கு எளிதாக்கப்படுவதற்காகவும், அவருக்கு அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், சொர்க்கத்தில் அவருக்கு உயர்ந்த பதவிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு சிறந்த பகரம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் நாம் துஆ செய்ய வேண்டும்.



இதுபோன்ற நல்ல காரியங்கள்தான் இறந்தவருக்கு பலன் தரும். அதுதான் நாம் அவருக்கு செய்யவேண்டிய அஞ்சலியும், மரியாதையும் கூட. இதுதான் உண்மையான நினைவு கூறுதலுமாகும்.



அல்லாஹ், நமக்கு நல்ல மரணத்தை தருவானாக! நல்லவர்களுடன் நம்மை சேர்ப்பானாக!



நான் முஸ்லிமாக இருக்கும் நிலையில் என்னை உயிர் கைப்பற்றிக்கொள்! இன்னும், நல்லவர்களுடன் என்னை சேர்த்து விடு! (அல்குர்ஆன் 12:101)

***

தேடல்
தொடர்புடைய பதிவுகள்
001 AlFathiha அத்தஹியாத் இருப்பில் விரலசைத்தல்! அன்பளிப்பு - உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 2 அரஃபா நோன்பு எந்த நாளில் பிடிக்க வேண்டும்? அரஃபா பேருரை! அரபியில்தான் குத்பாவா? அலைபேசி ஒழுக்கங்கள் அழிக்கப்பட்ட யானைப்படை!.. [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2] அழைப்பு கடிதம் (இந்துவுக்கு) அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் வழிமுறையை பின்பற்றுவோம் ஆட்சி மாற்றம்! அஞ்சத் தேவையில்லை! ஆண் குழந்தைகளுக்கு தங்கம் அணிவித்தல் ஆபாசத்தை தவிர்ந்து கொள்வது எப்படி...? இந்துக்களின் தாய்மதம் இப்ராஹீம் நபியும் காளைக் கன்றும்... இப்ராஹீம் நபியும் உயிர்த்தெழுதந்த பறவைகளும்... இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) மகத்தான வழிகாட்டிகள் - 5 இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) - 2 மகத்தான வழிகாட்டிகள் - 6 இமாம் மாலிக்(ரஹ்)_மகத்தான வழிகாட்டிகள்-2 இமாம் ஷாபிஈ (ரஹ்) இறுதி வரை ஏகத்துவம் இஸ்ரவேலரும் காளை மாடும்... இஸ்லாம் அழைக்கிறது! இறைவன் இருக்கிறானா ?அவன் ஒருவனா? பலரா? உணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 3 உள்ளங்களை வெல்வோம் – 5 உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 1 உஸைர் நபியும் உயிர் பெற்ற‌ கழுதையும்... உஸ்மான் (ரழி) கொலையும், கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்! என்னருமை தலித் சகோதரரே! எல்லை மீறுபவர்கள் அழிக்கப்படுவர்... ஒரு நடிகையின் வாக்குமூலம்! கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-1 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-2 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-3 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-4 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5 கருப்பு பணத்தை ஒழிக்க ஒரே வழி! கரை ஒதுங்கிய மீன்களும்… குரங்குகளாக மாற்றப்பட்ட மீனவர்களும்… கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணும், பாலூட்டும் பெண்ணும் ரமலானில் நோன்பு நோற்க முடியாவிட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part -2 காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part-1 காலையா மாலையா? கிறிஸ்துவ சகோதரர்களுக்கு ஒரு கடிதம் கிலாஃபத் - இஸ்லாமிய ஆட்சி குகை தோழர்களின் கதை குணத்தை மாற்ற முடியுமா? குற்றம் செய்வோரை வெறுத்து ஒதுக்குவோம் குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் - தொடர்- 1 ! குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – 3 குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – தொடர்- 2 ! கேம் விபரீதங்கள் கேள்வி: அல்குர்ஆனின் 3:26, 27 வசனத்தில், நீர் சொர்க்கத்தில் நுழைவீராக! என்று அவருக்கு கூறப்பட்டது” என்று உள்ளது.? கேள்வி: கிளி உள்ளிட்ட பறவைகளை கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பது ஆகுமானதா? அஸாருத்தீன், வில்லிவாக்கம், சென்னை. கேள்வி: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கொள்ளை நோய் வந்த போது, இருப்பவர்கள் தங்கள் இடங்களில் இருந்து கொள்ளுங்கள். வெளியே இருப்பவர்கள் நோய் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அந்த நேரத்தில் தொழுகைகளில் மாற்றம் செய்யவில்லை. தற்போது கொரானா காலத்தில் தொழுகைகளில் முகமூடி அணிந்து, சொல்கின்ற இடைவெளியில் வரிசையில் நின்று தொழுங்கள் என்ற நடைமுறை ஒத்துக்கொள்ளத் தக்கதா? ஷைத்தான் இடைவெளியில் புகுந்துவிடுவானே? விளக்கம் தரவும்! கொடிய மிருகங்களாக மாறிவிட்ட மதவெறியர்கள்! சத்திய சனாதன தர்மத்தை பின்பற்றுவீர்! சலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2 சலப், சலபி – சரியான புரிதல்! சுலைமான் நபியும்... ஹுத்ஹுத் பறவையும்... சூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு! சொர்கத்தில் துணைகள் ஜிஹாத் - ஒரு விளக்கம் ஜிஹாத் - ஒரு விளக்கம் [ பாகம்-2 ] தக்லீதின் எதார்த்தங்கள் தற்கொலை தீர்வாகுமா? தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா திருக்குர்ஆன் கூறும் (உண்மைக்) கதைகள் - 01 திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும் துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13. உழ்ஹிய்யா கொடுக்கலாமா? தேவனுக்கு குமாரனா? தொழுகை உடைய "ரூக்ன்" என்று சொல்லப்படும் ஃபர்ள்களிலிருந்து ஏதேனும் ஒன்று விட்டு விட்டால் அதை எவ்வாறு சரி செய்வது? தொழுகை முடித்து திரும்புதல் பற்றிய ஹதீஸ் தோன்றின் எடுப்போடு தோன்றுக! – உள்ளங்களை வெல்வோம்! – தொடர் 4 நபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…?! நபியவர்கள் தங்க மோதிரம் அணிந்ததாக கூறப்படும் ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது ? -8 நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நல்லறங்கள் நற்குணமும் நபியும் வழிகாட்டும் வாழ்வியல்- தொடர் 03 நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம் நல்லோரும் செய்யும் தவறுகள் - 1 (வீட்டோடு மாப்பிள்ளை) நல்லோரும் செய்யும் தவறுகள் - 3 (மார்க்கத்தின் பெயரால் சச்சரவு) நல்லோரும் செய்யும் தவறுகள் - 4(பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்காத பெற்றோர்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 6 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள்) நல்லோரும் செய்யும் தவறுகள் - 7 (மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள் - 2) நல்லோரும் செய்யும் தவறுகள் -2 பெண்களின் ஆடை - கவனம் தேவை நல்லோரும் செய்யும் தவறுகள்-5 ( பெண்ணுக்கு சொத்தில் பங்கில்லையா?) நெருக்கம் இறுதிவரை தொடரட்டும்..... பரக்கத்தை இழந்த ரஹ்மத்...! பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டும் தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வாபஸ்! பிக்ஹுன் னவாஸில்= பிரச்சினையான சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம் புரிய சிரமமான வசனங்கள்-1 புரிய சிரமமான வசனங்கள்-2 புரிய சிரமமான வசனங்கள்-3 புறக்கணிக்கப்படும் நபியின் வழிமுறைகள் - தாடியை வளர்ப்பதும் மீசையைக் கத்தரித்தலும்! பேசிய எறும்பு... பொது சிவில் சட்டம் எனும் பூச்சாண்டி! மனிதநேயத்தை வென்ற மிருகநேயம்! மறுமையில் ஓர் உரையாடல்... மஸ்ஜிதின் ஒழுக்கங்கள் மார்க்கப்பணிக்கு ஊதியம் பெறலாமா? மீலாதும் மவ்லிதும் முஸ்லிம் எல்லாரும் ஜிஹாதி தான் முஹம்மதிய சமுதாயத்தின் காரூன்கள் முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கட்டிடத்தின் கடைசிக் கல் முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும் மூசா நபியும்... அதிசயப் பாம்பும்‌... மூஸா நபியும் ஹிள்ர் நபியும்! யார் இந்த அல்லாமா ஷேய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி(ரஹ்) யூனுஸ் நபியை விழுங்கிய பிரம்மாண்ட மீன்... ரமலானும் ஈமானும்! ரமளானின் கடைசி பத்து நாட்கள் ரமளானை பயனுள்ளதாக்குவோம் லவ் ஓம்’ ஐ மறைக்கவே லவ் ஜிஹாத் பூச்சாண்டி! வரலாற்றை திரிக்கும் வகுப்புவாதிகள் வழிகாட்டும் வாழ்வியல் - தொடர் 02 வழிகாட்டும் வாழ்வியல் - தொடர்:01 ஷேய்க்.முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹ்) வாழ்க்கை வரலாறு ஷைத்தான்கள் பரவுதல் பற்றிய ஹதீஸ், ஹதீஸ் எப்படி புரிவது? - 7 ஸகாத்துல் (ஸதகத்துல்) பித்ர் பற்றி விளக்கம்? ஸாமிரியும்… காளை மாட்டுச் சிலையும்… ஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-4] ஹஜ் உம்ரா தொடர்பான சந்தேகங்கள்! ஹதீஸ் எப்படி புரிவது-3 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 6 ஹதீஸ் எப்படி புரிவது? ஹதீஸ் - 5 ஹதீஸ் எப்படி புரிவது?ஹதீஸ் - 4( தொழுகையை முறிக்கும் மூன்று) ஹதீஸ்_எப்படி புரிவது-1 ஹதீஸ்_எப்படி புரிவது-2 TEACHERS TRAINING COURSE